பாடியவர்: அரிசில் கிழார்
திணை: தும்பை துறை: தானைமறம்

‘தோல்தா; தோல்தா’ என்றி ; தோலொடு
துறுகல் மறையினும் உய்குவை போலாய்;
நெருநல் எல்லைநீ எறிந்தோன் தம்பி,
அகல்பெய் குன்றியின் சுழலும் கண்ணன்,
பேரூர் அட்ட கள்ளிற்கு
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework