போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ அறிகுவ(து) ஏதும் அரிதி யமன்விடுத்த
தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயி லோஎன நின்றவர் வாழ்பதியே. .. 2
கொளு
தெரியஅரியதோர் தெய்வமன்ன
அருவரைநாடன் ஐயுற்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework