அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை
மஞ்சார் புனத்தன்று மாந்தழை யேந்திவந் தார்அவரென்
நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கனவும்உண்டேல்
பஞ்சார் அமளிப் பிரிதலுண் டோஎம் பயோதரமே. ... 378
கொளு
வரிசிலை யுரன் பரிசு பழித்த
உழையர் கேட்ப எழில்நகை உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework