அரமங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்
அரமங் கையரென வந்தணு கும்அவள் அன்(று)உகிரால்
சிரம்அங்(கு) அயனைச் செற்றோன் தில்லைச் சிற்றம் பலம்வழுத்தாப்
புரமங் கையரின்நை யாதுஐய காத்துநம் பொற்பரையே. ... 371
கொளு
தீம்புனல் வாயில் சேயிழை வருமெனச்
காம்பன தோளியர் கலந்து கட்டுரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework