சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான்
சிவந்தஅம் தாளணி ஊரற்(கு) உலகிய லாறுரைப்பான்
சிவந்தபைம் போதும் அம் செம்மலர்ப் பட்டும்கட் டார்முலைமேல்
சிவந்தஅச் சாந்தமும் தோன்றின வந்து திருமனைக்கே. ... 361
கொளு
மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த
ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework