தெளிதரல் காரெனச் சீர்அனம் சிற்றம் பலத்தடியேன்
களிதரக் கார்மிடற் றோன்நட மாடக்கண் ணார்முழவம்
துளிதரல் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக்(கு) உன்குழல்போன்(று)
அளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித்(து) அலர்ந்தனவே. ... 324
கொளு
காரெனக் கலங்கும் ஏரெழில் கண்ணிக்கு
இன்துணைத் தோழி அன்றென்று மறுத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework