புரமன்(று) அயரப் பொருப்புவில் ஏந்திப் புத் தேளிர்நாப்பண்
சிரம்அன்(று) அயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம்பலம்அனையாள்
பரம்அன்(று) இரும்பனி பாரித்த வாபரந்(து) எங்கும்வையம்
சரமின்றி வான்தரு மேலாக்கும் மிக்க தமியருக்கே. ... 321
கொளு
இரும்பனியின் எதிர்வு கண்டு
கரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework