உளமாம் வகைநம்மை உய்யவந்(து) ஆண்டுசென்(று) உம்பர்உய்யக்
களமாம் விடம்அமிர்(து) ஆக்கிய தில்லைத்தொல் லோன்கயிலை
வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றோர்வஞ் சிம்மருங்குல்
இளமான் விழித்ததென் றோஇன்றெம் அண்ணல் இரங்கியதே. .. 22
கொளு
வெற்பனத்தன் மெய்ப்பதங்கன்
கற்பனையில் கழறியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework