ஐயுர வாய்நம் அகன்கடைக் கண்டுவண் தேர் உருட்டும்
மையுறு வாட்கண் மழவைத் தழுவமற்(று) உன்மகனே
மெய்யுற வாம்இதுன் இல்லே வருகென வெள்கிச்சென்றாள்
கையுறு மான்மறி யோன்புலி யூரன்ன காரிகையே. ... 399
கொளு
பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர்
அரத்த நெடுவேல் அண்ணற்(கு) உரைத்தது. 48.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework