தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழுதும்
ஓவியம் கண்டன்ன ஒண்ணுத லாள்தனக்(கு) ஒகையுய்ப்பான்
மேவியம் கண்டனை யோவந் தனன்என வெய்துயிர்த்துக்
காவியம் கண்கழு நீர்ச்செவ்வி வெளவுதல் கற்றனவே. ... 384
கொளு
கன்னி மானோக்கி கனன்று நோக்க
மன்னிய மனையவர் மகிழ்ந்து ரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework