செய்குன்(று) உவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி
நைகின்ற திங்கள்எய்ப்(பு) ஆறும் பொழில்அவை ஞாங்கர்எங்கும்
பொய்குன்ற வேதியர் ஓதிடம் உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை அம்பல வற்(கு)இடம் ஏந்திழையே. .. 223
கொளு
கண்ணிவர் வளநகர் கண்டுசென்(று(அடைந்து
பண்ணிவர் மொழிக்குப் பதிபரி(சு)உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework