முன்னோன் அருள்முன்னும் உன்னா வினையின் முகர்துன்னும்
இன்னாக் கடறி(து)இப் போழ்தே கடந்தின்று காண்டும்சென்று
பொன்னார் அணிமணி மாளிகைத் தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா எனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே. .. 217
கொளு
இன்னல் வெங்க டந்தெறி வேலவன்
அன்னம் அன்னவள் அயர்(வு)அ கற்றியது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework