இங்(கு)அயல் என்நீ பணிக்கின்ற(து) ஏந்தல் இணைப்பதில்லாக்
கங்கைஅம் செஞ்சடைக் கண்ணுதல் அண்ணல் கடிகொள்தில்லைப்
பங்கயப் பாசடைப் பாய்தடம் நீஅப் படர்தடத்துச்
செங்கயல் அன்றே கருங்கயல் கண்ணித் திருநுதலே. .. 203
கொளு
கார்த் தடமும் கயலும் போன்றீர்
வார்த்தட முலையும் மன்னனும் என்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework