விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ்
கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர்
கண்டிலை யேவரக் கங்குல்எல் லாம்மங்குல் வாய்விளக்கும்
மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. .. 177
கொளு
மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல்
தன்னுட் கையாறு எய்திடு கிளவி.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework