மருந்துநம் அல்லற் பிறவிப் பிணிக்(குஅம் பலத்(து)அமிர்தாய்
இருந்தனர் குன்றின்நின்(று) ஏங்கும் அருவிசென்(று) ஏர்திகழப்
பொருந்தின மேகம் புதைத்திருள் தூங்கும் புனை இறும்பின்
விருந்தின் யான்உங்கள் சீறூர் அதனுக்கு வெள்வளையே. .. 148
கொளு
நள்ளிருள் குறியை வள்ளல் நினைந்து
வீங்கு மென்முலைப் பாங்கிற்(கு) உரைத்தது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework