குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை ஏத்தலர்போல்
வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன்(று)
ஒருநாள் பிரியா(து) உயிரின் பழகி யுடன்வளர்ந்த
அருநாண் அளிய அழல்சேர் மெழுகொத்(து) அழிகின்றதே. .. 44
கொளு
ஆங்ங னம்கண்(டு) ஆற்றா ளாகி
நீங்கன நாணொடு நேரிழை நின்றது.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework