351. ஆர்த்த அறிவினர் ஆண்டிளைய ராயினும்
காத்தோம்பித் தம்மை அடக்குப - மூத்தொறு஡உம்
தீத்தொழிலே கன்றித் தி஡஢தந் தெருவைபோல்
போத்தறார் புல்லறிவி னார்.

352. செழும்பெரும் பொய்கையுள் வாழினும் என்றும்
வழும்பறுக்க கில்லாவாம் தேரை - வழும்பில்சீர்
நு஡ல்கற்றக் கண்ணும் நுணுக்கமொன் றில்லாதார்
தேர்கிற்கும் பெற்றி அ஡஢து.

353. கணமலை நன்னாட. கண்ணின் றொருவர்
குணனேயுங் கூற்ற கா஢தால், - குணனழுங்கக்
குற்றம் உழைநின்று கூறுஞ் சிறியவர்கட்கு
எற்றா லியன்றதோ நா.

354. கோடேந் தகலல்குல் பெண்டிர்தம் பெண்ணீர்மை
சேடியர் போலச் செயல்தேற்றார் - கூடிப்
புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
மதித்திறப்பர் மற்றை யவர்.

355. தளிர்மேலே நிற்பினும் தட்டாமற் செல்லா
உளிநீரார் மாதோ கயவர் - அளிநீரார்க்
கென்னானும் செய்யார் எனைத்தானும் செய்பவே
இன்னாங்கு செய்வார்ப் பெறின்.

356. மலைநலம் உள்ளும் குறவன் பயந்த
விளைநிலம் உள்ளும் உழவன் சிறந்தொருவர்
செய்தநன் றுள்ளுவர் சான்றோர் கயந்தன்னை
வைததை உள்ளி விடும்.

357. ஒருநன்றி செய்தவர்க் கொன்றி யெழுந்த
பிழைநு஡றும் சான்றோர் பொறுப்பர் - கயவர்க்கு
எழுநு஡று நன்றிசெய் தொன்றுதீ தாயின்
எழுநு஡றும் தீதாய் விடும்.

358. ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன்
மோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் - கோட்டை
வயிரஞ் செறிப்பினும் வாட்கண்ணாய் பன்றி
செயிர்வேழ மாகுத லின்று.

359. இன்றாதும் இந்நிலையே ஆதும் இனிச்சிறிது
நின்றாதும் என்று நினைத்திருந் - தொன்றி
உரையின் மகிழ்ந்துதம் உள்ளம்வே றாகி
மரையிலையின் மாய்ந்தார் பலர்.

360. நீருள் பிறந்து நிறம்பசிய தாயினும்
ஈரங் கிடையகத் தில்லாகும் - ஓரும்
நிறைப்பெருஞ் செல்வத்து நின்றக் கடைத்தும்
அறைப்பெருங்கல் அன்னா ருடைத்து.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework