அருங் கடி அன்னை காவல் நீவி
பெருங் கடை இறந்து மன்றம் போகி
பகலே பலரும் காண வாய் விட்டு
அகல் வயற் படப்பை அவன் ஊர் வினவி
சென்மோ வாழி தோழி பல் நாள்
கருவி வானம் பெய்யாதுஆயினும்
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின்
வான் தோய் மா மலைக் கிழவனை
சான்றோய் அல்லை என்றனம் வரற்கே
தோழி தலைமகன் சிறைப்புறத்தானாக தலைமகட்கு உரைப்பாளாய்
இயற்பழித்துஇன்னது செய்தும் என்பாளாய்ச் சொல்லியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework