கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத்
தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என
வியம் கொண்டு ஏகினைஆயின் எனையதூஉம்
உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன்
பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு
வம்மோ தோழி மலி நீர்ச் சேர்ப்ப
பைந் தழை சிதைய கோதை வாட
நன்னர் மாலை நெருநை நின்னொடு
சில விளங்கு எல் வளை ஞெகிழ
அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே
பகற்குறி வந்து நீங்கும் தலைமகனைத் தோழி
தலைமகளை என்னை ஆற்றுவிக்குமென்று ஆகாதோ
எம்பெருமான் கவலாது செல்வது யான் ஆற்றுவிக்குமிடத்துக்
கவன்றால் நீ ஆற்றுவி எனச் சொல்லியது கையுறை நேர்ந்த
தோழி தலைமகட்குக் கையுறை உரைத்ததூஉம் ஆம்

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework