நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்
பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்
சாதலும் இனிதே காதல்அம் தோழி
அந் நிலை அல்லஆயினும் சான்றோர்
கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து
உலகம் கூறுவது உண்டு என நிலைஇய
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ்
புன்னை ஓங்கிய கானற்
தண்ணம் துறைவன் சாயல் மார்பே
வரையாது நெடுங்காலம் வந்தொழுக ஆற்றாளாய
தலைமகள் வன்புறை எதிர் அழிந்தது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework