நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும்
தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி
யான் செய்தன்று இவள் துயர் என அன்பின்
ஆழல் வாழி தோழி வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும்
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே
விழுமமாக அறியுநர் இன்று என
கூறுவைமன்னோ நீயே
தேறுவன்மன் யான் அவருடை நட்பே
வரைவு நீட ஆற்றாள் எனக் கவன்று தான் ஆற்றாளாகிய
தோழியைத் தலைமகள் ஆற்றுவித்தது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework