எல்லா! இ·து ஒன்று - கூறு குறும்பு இவர்புல் இனத்தார்க்கும், குடம் சுட்டவர்க்கும், எம்
கொல் ஏறு கோடல் குறை எனக், கோவினத்தார்
பல் ஏறு பெய்தார் தொழூஉ.
தொழுவத்து
சில்லைச் செவி மறைக் கொண்டவன் சென்னிக் குவி முல்லை
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு, ஆட்டிய
ஏழை இரும் புகர் பொங்க, அப் பூ வந்து என்
கூழையுள் வீழ்ந்தன்று மன்;
அதனைக், கெடுத்தது பெற்றார் போல், கொண்டு யான் முடித்தது
கேட்டனள், என்பவோ, யாய்?
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ? மற்று இகா?
அவன் கண்ணி அன்றோ, அது?
'பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான்
கை புனை கண்ணி முடித்தாள்' என்று, யாய் கேட்பின்
செய்வது இல் ஆகுமோ மற்று?
எல்லாத் தவறும் அறும்.
ஓஒ! அ·து அறும் ஆறு?
ஆயர் மகன் ஆயின், ஆய மகள் நீ ஆயின்,
நின் வெய்யன் ஆயின், அவன் வெய்யை நீ ஆயின்,
அன்னை நோதக்கதோ இல்லை மன்; - நின் நெஞ்சம்,
அன்னை நெஞ்சு ஆகப் பெறின்.
அன்னையோ?
ஆயர் மகனையும் காதலை; கைம்மிக
ஞாயையும் அஞ்சுதி; ஆயின், அரிது அரோ
நீ உற்ற நோய்க்கு மருந்து.
மருந்து இன்று, யான் உற்ற துயர் ஆயின், - எல்லா!
வருந்துவேன் அல்லனோ, யான்?
வருந்தாதி -
மண்ணி மாசு அற்ற நின் கூழையுள் ஏறு அவன்
கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத், 'திண்ணிதாத்
தெய்வ மால், காட்டிற்று இவட்கு' என, நின்னை அப்
பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் - தந்தையோடு
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework