நல்நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர்,துன்அருங் கானம் துன்னுதல் நன்று' எனப்
பின்னின்று சூழ்ந்தனை ஆயின், நன்று இன்னாச்
சூழ்ந்திசின் - வாழிய நெஞ்சு!- வெய்துற
இடிஉமிழ் வானம் நீங்கி, யாங்கணும் 5
குடிபதிப் பெயர்ந்த சுட்டுடை முதுபாழ்,
கயிறுபிணிக் குழிசி ஓலை கொண்மார்,
பொறிகண்டு அழிக்கும் ஆவண மாக்களின்,
உயிர்திறம் பெயர, நல்அமர்க் கடந்த
தறுக ணாளர் குடர் தரீஇத் தெறுவச், 10
செஞ்செவி எருவை, அஞ்சுவர இருக்கும்
கல்அதர்க் கவலை போகின், சீறூர்ப்
புல்அரை இத்திப் புகர்படு நீழல்
எல்வளி அலைக்கும், இருள்கூர் மாலை,
வானவன் மறவன், வணங்குவில் தடக்கை, 15
ஆனா நறவின் வண்மகிழ் பிட்டன்
பொருந்தா மன்னர் அருஞ்சமத்து உயர்த்த
திருந்துஇலை எஃகம் போல,
அருந்துயர் தரும், இவள் பனிவார் கண்ணே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework