சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான்ஊர்மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர்முள் வேலி கோட்டின் நீக்கி
நீர்முதிர் பழனத்து மீன்உடன் இரிய,
அம்தூம்பு வள்ளை மயக்கித் தாமரை 5
வண்டூது பனிமலர் ஆரும் ஊர!
யாரை யோ? நிற் புலக்கேம், வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ்இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம்மனைத் தந்து,
வதுவை அயர்ந்தனை என்ப; அஃது யாம் 10
கூறேம்; வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ்சமம் ததைய நூறும்
ஒளிறுவாள் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்னஎன்
ஒண்தொடி நெகிழினும் நெகிழ்க;
சென்றீ, பெரும! நிற் றகைக்குநர் யாரோ?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework