"தொடங்கு வினை தவிர அசைவில் நோன்தாள்,கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும், இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலியினும் சிறந்த
தாழ்வுஇல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பப்
செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று 5
இருவேறு ஆகிய தெரிதகு வனப்பின்
மாவின் நறுவடி போலக், காண்தொறும்
மேவல் தண்டா மகிழ்நோக்கு உண்கண்
நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்
வாழலென் யான்" எனத் தேற்றிப், "பல்மாண் 10
தாழக் கூறிய தகைசால் நன்மொழி
மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்தநின்
எயிறுகெழு துவர்வாய் இன்நகை அழுங்க
வினவல் ஆனாப் புனையிழை!- கேள்இனி-
வெம்மை தண்டா எரிஉகு பறந்தலை, 15
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங்கு அறியாது, தேர்மருங்கு ஓடி,
அறுநீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
எள்ளல் நோனாப் பொருள்தரல் விருப்பொடு 20
நாணுத் தளைஆக வைகி, மாண்வினைக்கு
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
மடம்கெழு நெஞ்சம் நின் உழை யதுவே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework