381. அரும்பெறற் கற்பின் அயிராணி யன்ன
பெரும்பெயர்ப் பெண்டி ரெனினும் - விரும்பிப்
பெறுநசையால் பின்னிற்பா ஡஢ன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை.

382. குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதும்
கடனீ ரறவுண்ணும் கேளிர் வா஢னும்
கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
மாதர் மனைமாட்சி யாள்.

383. நாலாறும் ஆறாய் நனிசிறிதாய் எப்புறனும்
மேலாறு மேலுறை சோ஡஢னும் - மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழு மாண்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

384. கட்கினியாள், காதலன் காதல் வகைபுனைவாள்,
உட்குடையாள், ஊர்நாண் இயல்பினாள், - உட்கி
இடனறிந் து஡டி இனிதின் உணரும்
மடமொழி மாதராள் பெண்.

385. எஞ்ஞான்றும் எங்கணவர் எந்தோள்மேற் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பெருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.

386. உள்ளத் துணர்வுடையான் ஓதிய நு஡லற்றால்
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் - தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
நாணுடையாள் பெற்ற நலம்.

387. கருங்கொள்ளும் செங்கொள்ளும் து஡ணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.

388. கொடியவை கூறாதி பாண. நீ கூறின்
அடிபைய இட்டொதுங்கிச் சென்று - துடியின்
இடக்கண் அனையம்யாம் ஊரற் கதனால்
வலக்கண் அனையார்க் குரை.

389. சாய்ப்பறிக்க நீர்திகழும் தண்வய லு஡ரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந் தணியகலம்
நோக்கி யிருந்தேனும் யான்.

390. அரும்பவிழ் தா஡஢னான் எம்அருளும் என்று
பெரும்பொய் உரையாதி, பாண - கரும்பின்
கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
இடைக்கண் அனையார்க் குரை.
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework