213.
அல்லது செல்வார் அரும்பொருள் ஆக்கத்தை
நல்லது செல்வாாண்ட துணிவொன்றும் இல்லாதார்
நன்மையின் மாண்ட பொருள்பெறுதல் - இன்னொலிநீர்
கல்மேல் இலங்கு மலைநாட ! 'மாக்காய்த்துத்
தன்மேல் குணில்கொள்ளு மாறு'.
215.
பெற்றாலும் செல்வம் பிறர்க்கீயார் தாந்துவ்வார்
சுற்றாரும் பற்றி இறுகுபவால் - கற்றா
வரம்பிடைப் பூமேயும் வண்புணல் ஊர!
'மரங்குறைப்ப மண்ணா மயிர்'.
216.
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கு முரசுடைச் செல்வம் - தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
'நாய்பெற்ற தெங்கம் பழம்'
217.
முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்
விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்
இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்
'அழகொடு கண்ணின் இழவு'.
218.
நாவின் இரந்தார் குறையறிந்து தாமுடைய
மாவினை மாணப் பொதிகிற்பார் - தீவினை
அஞ்சிலென் அஞ்சா விடிலென் 'குருட்டுக்கண்
துஞ்சிலென் துஞ்சாக்கால் என்?'
219.
படரும் பிறப்பிற்கொன்(று) ஈயார் பொருளைத்
தொடருந்தம் பற்றினால் வைத்திறப் பாரே
அடரும் பொழுதின்கண் இட்டுக் 'குடரொழிய
மீவேலி போக்கு பவர்'.
220.
விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்
இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! 'ஆற்றக்
கரும்பனை அன்ன துடைத்து'.
221.
வழங்கார் வலியலார் வாய்ச்சொல்லும் பொல்லார்
உழந்தொருவர்க்(கு) உற்றால் உதவலும் இல்லார்
இழந்ததில் செல்வம் பெறுதலும் இன்னார்
'பழஞ்செய்போர் பின்று விடல்'.
222.
ஒற்கப்பட் டாற்றார் உணர உரைத்தபின்
நற்செய்கை செய்வார்போல் காட்டி நசையழுங்க
வற்கென்ற செய்கை அதுவால் அவ்வாயுறைப்
புற்கழுத்தில் யாத்து விடல்'.
223.
அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்று
அடைய அமர்த்தகண் பைந்தொடி! அஃதால்
'இடையன் எறிந்த மரம்'.
224.
மரம்போல் வலிய மனத்தாரை முன்னின்று
இரந்தார் பெறுவதொன் றில்லை - குரங்கூசல்
வள்ளியி னாடு மலைநாட ! அஃதன்றோ
'பள்ளியுள் ஐயம் புகல்'
225.
இசைவ கொடுப்பதூஉம் இல்லென் பதூஉம்
வசையன்று வையத்(து) இயற்கை - அஃதன்றிப்
பசைகொண் டவன்நிற்கப் பாத்துண்ணான் ஆயின்
'நசைகொன்றான் செல்லுலகம் இல்'.
226.
தமராலும் தம்மாலும் உற்றால்ஒன்(று) ஆற்றி
நிகராகிச் சென்றாகும் அல்லர் - இவர்திரை
நீத்தநீர்த் தண்சேர்ப்ப ! செய்தது 'உவவாதார்க்(கு)
ஈத்ததை எல்லாம் இழவு'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework