177
சுற்றத்தார் நட்டார் எனச்சென்று ஒருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் - கொற்றப்புள்
ஊர்ந்துலகம் தாவின அண்ணலே யாயினும்
'சீர்ந்தது செய்யாதார் இல்'.
178.
வெள்ளமாண் பெல்லாம் உடைய தமரிருப்ப
உள்ளமாண் பில்லா ஒருவரைத் தெள்ளி
மறைக்கண் பிரித்தவரை மாற்றா தொழிதல்
'பறைக்கண் கடிப்பிடு மாறு'.
179.
அன்பறிந்த பின்அல்லால் யார்யார்க்கும் தம்மறையே
முன்பிறர்க்(கு) ஓடி மொழியற்க - தின்குறுவான்
கொல்வாங்குக் கொன்றபின் அல்லது 'உயக்கொண்டு
புல்வாய் வழிப்படுவார் இல்'.
180.
நயவர நட்டொழுகு வாரும்தாம் கேட்ட(து)
உயவா(து) ஒழிவார் ஒருவரும் இல்லை
புயலமை கூந்தல் பொலந்தொடி! சான்றோர்
'கயவர்க்(கு) உரையார் மறை'.
181.
பெருமலை நாட! பிறர்அறிய லாகா
அருமறையை ஆன்றோரே காப்பர் - அருமறையை
நெஞ்சிற் சிறியார்க்கு உரைத்தல் 'பனையின்மேல்
பஞ்சிவைத்(து) எஃகிவிட் டற்று'.
182.
விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
அளிந்தார்கண் ஆயினும் 'ஆராயா னாகித்
தெளிந்தான் விளிந்து விடும்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework