135.
கண்ணுள் மணியேபோல் காதலாய் நட்டாரும்
எண்ணும் துணையில் பிறராகி நிற்பராய்
எண்ணிஉயிர் கொள்வான் வேண்டித் திரியினும்
'உண்ணும் துணைக்காக்கும் கூற்று'.
136.
எயப்புழி வைப்பாம் எனப்போற்றப் பட்டவர்
உற்றுழி ஒன்றுக்கு உதவலர் பைந்தொடீஇ!
அச்சிடை இட்டுத் திரியின் அதுவன்றோ
'மச்சேற்றி ஏணி களைவு.'
137.
பாப்புக் கொடியாற்குப் பால்மேனி யான்போலத்
தாக்கி அமருள் தலைப் பெய்யார் - போக்கி
வழியராய் நட்டார்க்கு மாதவம் செய்வாரே
'கழிவிழாத் தோளேற்று வார்'.
138.
இடையீ(டு) உடையார் இவர்அவரோ(டு) என்று
தலையாயர் ஆராய்ந்தும் காணார் - கடையாயர்
முன்னின்று கூறும் குறளை தெரிதலால்
'பின்னின்னா பேதையார் நட்பு.'
139.
தாமகத்தால் நட்டுத் தமரென்று ஒழுகியக்கால்
நாணகத்துத் தாமின்றி நன்றொழுகார் ஆயினென்
மான்மானும் கண்ணாய்! மறந்தும் பரியலரா
'கானகத்து உக்க நிலா'.
140.
கண்டறிவார் போலார் கெழீஇயின்மை செய்வாரைப்
பண்டறிவார் போலாது தாமும் அவரேபோல்
விண்டொரீஇ மாற்றி விடுதல் அதுவன்றோ
'விண்டற்கு விண்டல் மருந்து'.
141.
பெரியநட் டார்க்கும் பகைவர்க்கும் சென்று
திரிவின்றித் தீர்ந்தார்போல் சொல்லி அவருள்
ஒருவரோ டொன்றி ஒருப்படா தாரே
'இருதலைக் கொள்ளியென் பார்'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework