60.
அறிவன்று அழகன்று அறிவதூஉம் அன்று
சிறியர் எனப்பாடும் செய்யும் - எறிதிரை
சென்றுலாம் சேர்ப்ப ! 'குழுவத்தார் மேயிருந்த
என்றூடு அறுப்பினும் மன்று'.
61.
ஆமாலோ என்று பெரியாரை முன்னின்று
தாமாச் சிறியார் தறுகண்மை செய்தொழுகல்
போமாறு அறியாப் புலன்மயங்கி ஊர்புக்குச்
சாமாகண் காணாத வாறு.'
62.
எல்லாத் திறத்தும் இறப்பப் பெரியாரைக்
கல்லாத் துணையார்தாம் கைப்பித்தல் - சொல்வின்
நிறைந்தார் வளையினாய்! அஃதால் 'எருக்கு
மறைந்துயானை பாய்ச்சி விடல்'.
63.
முன்னும் ஒருகால் பிழைப்பானை ஆற்றவும்
பின்னும் பிழைப்பப் பொறுப்பவோ - இன்னிசை
யாழின் வண்டார்க்கும் புனலூர ! 'ஈனுமோ
வாழை இருகால் குலை'.
64.
நெடுங்காலம் வந்தார் நெறியின்மை கண்டு
நடுங்கிப் பெரிதும் நலிவார் பெரியர்
அடும்பார் அணிகானற் சேர்ப்ப! 'கெடுமே
கொடும்பாடு உடையான் குடி'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework