51.
இறப்பச் சிறியவர் இன்னா செயினும்
பிறப்பினால் மாண்டார் வெகுளார் - திறத்துள்ளி
'நல்ல விறகின் அடினும் நனிவெந்நீர்
இல்லம் சுடுகலா வாறு'.
52.
ஆறாச் சினத்தன் அறிவிலன் மற்றவனை
மாறி ஒழுகல் தலையென்ப - ஏறி
வளியால் திரையுலாம் வாங்குநீர்ச் சேர்ப்ப !
'தெளியானைத் தேறல் அரிது'.
53.
உற்றதற் கெல்லாம் உரஞ்செய்ய வேண்டுமோ?
கற்றறிந்தார் தம்மை வெகுளாமைக் காப்பமையும்
நெற்செய்யப் புல்தேய்ந்தாற் போல 'நெடும்பகை
தற்செய்யத் தானே கெடும்'.
54.
எய்தா நகைச்சொல் எடுத்துரைக்கப் பட்டவர்
வைதாராக் கொண்டு விடுவர்மன் - அஃதால்
புனற்பொய்கை ஊர! 'விளக்கெலி கொண்டு
தனக்குநோய் செய்து விடல்'.
55.
தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க - பரிவில்லா
வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே
'அம்பலம் தாழ்க்கூட்டு வார்'.
56.
கையார உண்டமையால் காய்வார் பொருட்டாகப்
பொய்யாகத் தம்மை பொருளல்லார் கூறுபவேல்
மையார உண்டகண் மாணிழாய் ! என்பரிவ
'செய்யாத செய்தா வெனில்?'
57.
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்தெதிர் சொல்லுபவோ கற்றறிந்தார்? தீந்தேன்
முசுக்குத்தி நக்கு மலைநாட! தம்மைப்
'பசுக்கு்தின் குத்துவார் இல்'.
58.
நோவ உரைத்தாரைத் தாம்பொறுக்க லாகாதார்
நாவின் ஒருவரை வைதால் வயவுரை
பூவிற் பொலிந்தகன்ற கண்ணாய்! அதுவன்றோ
'தீயில்லை ஊட்டும் திறம்'.
59.
சுறுத்தாற்றித் தம்மைக் கடியசெய் தாரைப்
பொறுத்தாற்றிச் சேறல் புகழால் - ஒறுத்தாற்றின்
வானோங்கு மால்வரை வெற்ப! பயனின்றே
'தானோன் றிடவரும் சால்பு'.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework