பொய்கை நீர்நாய்ப் புலவுநாறு இரும்போத்துவாளை நாளிரை தேரும் ஊர!
நாணினென் பெரும! யானே- பாணன்
மல்லடு மார்பின் வலியுற வருந்தி
எதிர்தலைக் கொண்ட ஆரியப் பொருநன் 5
நிறைத்திரண் முழவுத்தோள் கையகத்து ஒழிந்த
திறன்வேறு கிடக்கை நோக்கி நற்போர்க்
கணையன் நாணி யாங்கு- மறையினள்
மெல்ல வந்து நல்ல கூறி
மைஈர் ஓதி மடவோய்! யானும்நின் 10
சேரி யேனே அயலி லாட்டியேன்
நுங்கை ஆகுவென் நினக்கெனத் தன்கைத்
தொடுமணி மெல்விரல் தண்ணெனத் தைவர
நுதலும் கூந்தலும் நீவி
பகல்வந்து பெயர்ந்த வாணநுதற் கண்டே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework