மாதிரம் புதையப் பாஅய்க் கால்வீழ்த்துஏறுடைப் பெருமழை பொழிந்தென அவல்தோறு
ஆடுகளப் பறையின் வரிநுணல் கறங்க
ஆய்பொன் அவிர்இழை தூக்கி யன்ன
நீடிணர்க் கொன்றை- கவின்பெறக் காடுடன் 5
சுடர்புரை தோன்றிப் புதல்தலைக் கொளாஅ
முல்லை இல்லமொடு மலரக் கல்ல
பகுவாய்ப் பைஞ்சுனை மாவுண மலிரக்
கார்தொடங் கின்றே காலை காதலர்
வெஞ்சின வேந்தன் வியன்பெரும் பாசறை 10
வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார்
யாதுசெய் வாங் கொல்?- தோழி!- நோதகக்
கொலைகுறித் தன்ன மாலை
துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework