தோளும் தொல்கவின் தொலைய நாளும்நலங்கவர் பசலை நல்கின்று நலியச்
சால்பெருந் தானைச் சேர லாதன்
மால்கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
பண்ணமை முரசின் கண் அதிர்ந்தன்ன 5
கவ்வை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர்நமக்கு ஒழியச்
சென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே
வாய்க்கதில்- வாழி தோழி- வாயாது
மழைகரந்து ஒளித்த கழைதிரங்கு அடுக்கத்து 10
ஒண்கேழ் வயப்புலி பாய்ந்தென குவவுஅடி
வெண்கோட்டு யானை முழக்கிசை வெரீஇக்
கன்றொழித்து ஒடிய புன்தலை மடப்பிடி
கைதலை வைத்த மையல் விதுப்பொடு
கெடுமகப் பெண்டிரின் தேரும்
நெடுமர மருங்கின் மலைஇறந் தோரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework