வேந்துவினை முடித்த காலைத் தேம்பாய்ந்துஇனவண்டு ஆர்க்கும் தண்நறும் புறவின்
வென்வேல் இளையர் இன்புற, வலவன்
வள்புவலித்து ஊரின் அல்லது, முள்உறின்
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா 5
நன்னால்கு பூண்ட கடும்பரி நெடுந்தேர்
வாங்குசினை பொலிய ஏறிப்; புதல
பூங்கொடி அவரைப் பொய்அதள் அன்ன
உள்இல் வயிற்ற, வெள்ளை வெண்மறி,
மாழ்கி யன்ன தாழ்பெருஞ் செவிய, 10
புன்றலை சிறாரோடு உகளி, மன்றுழைக்
கவைஇலை ஆரின் அங்குழை கறிக்கும்
சீறூர் பலபிறக்கு ஒழிய, மாலை
இனிதுசெய் தனையால் - எந்தை! வாழிய!-
பனிவார் கண்ணள் பலபுலந்து உறையும் 15
ஆய்தொடி அரிவை கூந்தற்
போதுகுரல் அணிய வேய்தந் தோயே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework