சுடிதாரின் 'உடன் பிறப்பான' துப்பட்டா, தன் சோகத்தை வெளிப்படுத்துவதுபோல் அமைத்த 'ஒப்பாரி' (நகைச்சுவை) பாடல் இது.


துப்புக் கெட்டத் தனமாத்தான்
"துப்பட்டா'வா பொறந்துட்டேன் - என்னெ
தப்புத் தப்பா உடுத்திக்கிட்டு
தறிகெட்டு அலையுறீங்க.............

மடிசாரா பொறந்துருந்தா
மாமிகள கவர்ந்துருப்பேன்!
சுடிதாரு ஒடன்பொறந்து
சொகங்கெட்டுப் போனேனே......

கோவணமா பொறந்துருந்தா
கோடிபேரு மானம் காப்பேன் - இந்த
பாவசென்மம் எடுத்துப்புட்டு
பவுசுக் கெட்டு நிக்கறேனே......

மாருமேல போட்டுக்கிட்டா
மானந்தான் காத்துடலாம் - சும்மா
'பேருக்கு'ப் போட்டுக்கிட்டா
பெரயோசனம் ஏதுமில்லே....
கழுத்தச் சுத்தி போட்டுக்கிட்டு
கண்ட ஸ்டைலு பண்ணுறீக..- எவனும்
இழுத்துக்கிட்டு போறதுக்கு
எடங்குடுக்கப் பாக்குறீக....!

கண்ட கண்ட எடத்துலெல்லாம்
கட்டிக்கிட்டு அலையறீக...- அத
காணச் சகிக்கலேம்மா - ஒங்க
கண்றாவி நாகரீகம்!

உக்காரும் எடத்துலெல்லாம்
ஒட்டிக்கிற தூசித் தட்ட
'துப்பட்டா' நானென்ன
'தொடப்பமா' ஒங்களுக்கு......?

பின்னால தொங்கவுட்டா
'பெரயோசனம்' இல்லையம்மா..
தன்னால தெரிஞ்சிக்கணும்..- நா
'தண்டோரா' போடமாட்டேன்!

தாவணியத்தான் மறந்தீக
தமிழ்நாட்டு பொண்ணுகள்ளாம்
பாவமாத்தான் இருக்கு - உங்கள
பாக்கறவன் பார்வையால!

முந்தானையும் தாவணியும்
முழுசாவே மறந்தாச்சு - இப்போ
எந்த பொண்ணும் அதுகள
ஏறெடுத்தும் பாக்கறதில்லே!

பொண்ணோட மானங்காக்கும்
பொறுப்போட நா வந்தேன் - அத
எண்ணாம திரியுதுக
இந்தக்கால பொண்ணுங்கள்லாம்......
கெட்ட காலம் பொறந்துடுச்சி
கேடுகெட்ட ஒலகத்துல - இவுக
பட்டாத்தான் புத்திவரும்
பாக்கத்தானே போறேன் நா!....
- கிரிஜா மணாளன்
JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework