நீடு சினைப் புன்னை நறுந் தாது உதிர
கோடு புனை குருகின் தோடு தலைப் பெயரும்
பல் பூங் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த
என்னும் நாணும் நன்னுதல் உவப்ப
வருவைஆயினோ நன்றே பெருங் கடல்
இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்தென உரவுத் திரை
எறிவன போல வரூஉம்
உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே
வரையாது நெடுங்காலம் வந்தொழுக தலைமகளது
நிலை உணர்ந்த தோழி வரைவு கடாயது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework