நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி
பால் மலி கடலின் பரந்து பட்டன்றே
ஊரே ஒலி வரும் சும்மையடு மலிபு தொகுபு ஈண்டி
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்தோறும்
தாம் அமர் துணையடு வண்டு இமிரும்மே
யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு
கனை இருங் கங்குலும் கண்படை இலெனே
அதனால் என்னொடு பொரும்கொல் இவ் உலகம்
உலகமொடு பொரும்கொல் என் அவலம் உறு நெஞ்சே
வேட்கை பெருகத் தாங்கலளாய்
ஆற்றாமை மீதூர்கின்றாள் சொல்லியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework