இவள்தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின்
அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டி
பகலும் வருதி பல் பூங் கானல்
இன்னீர்ஆகலோ இனிதால் எனின் இவள்
அலரின் அருங் கடிப் படுகுவள் அதனால்
எல்லி வம்மோ மெல்லம் புலம்ப
சுறவினம் கலித்த நிறை இரும் பரப்பின்
துறையினும் துஞ்சாக் கண்ணர்
பெண்டிரும் உடைத்து இவ் அம்பல் ஊரே
பகற்குறி வந்து மீள்வானைத் தோழி இரவுக்குறி
நேர்வாள் போன்று அதுவும் மறுத்து வரைவு கடாயது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework