பளிங்கு செறிந்தன்ன பல் கதிர் இடைஇடை
பால் முகந்தன்ன பசு வெண் நிலவின்
மால்பு இடர் அறியா நிறையுறு மதியம்
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்
நிற் கரந்து உறையும் உலகம் இன்மையின்
எற் கரந்து உறைவோர் உள்வழி காட்டாய்
நற் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்
சிறுகுபு சிறுகுபு செரீஇ
அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே
நெட்டிடை கழிந்து பொருள்வயிற் பிரிந்த
காலத்து ஆற்றாளாகிய தலைமகள் திங்கள்
மேலிட்டுத் தன்னுள்ளே சொல்லியது

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework