நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக்கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக,
அரைசு கால் கிளர்ந்தன்ன உரவு நீர்ச் சேர்ப்ப! கேள்;
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான், விச்சைக்கண்
தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால்;
ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான், மற்று அவன்
எச்சத்துள் ஆயினும், அ·து எறியாது விடாதே காண்;
கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள்
தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால்;
சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின், மற்று அவன்
வாள் வாய் நன்று ஆயினும், அ·து எறியாது விடாதே காண்;
ஆங்கு,
அனைத்து, இனி - பெரும! - அதன் நிலை, நினைத்துக் காண்;
சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த
வினை வரு பருவரல் போல,
துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework