நல் நுதாஅல்! காண்டை; நினையா நெடிது உயிரா,என் உற்றாள் கொல்லோ? இ·து ஒத்தி - பல் மாண்
நகுதரும் - தன் நாணுக் கைவிட்டு, இகுதரும்
கண்ணீர் துடையாக், கவிழ்ந்து, நிலன் நோக்கி
அன்ன இடும்பை பல செய்து, தன்னை
வினவுவார்க்கு ஏதில சொல்லிக், கனவு போல்,
தெருளும் மருளும் மயங்கி வருபவள்
கூறுப கேளாமோ, சென்று?
'எல்லா! நீ என் அணங்கு உற்றனை? யார் நின் இது செய்தார்?
நின் உற்ற அல்லல் உரை', என என்னை
வினவுவீர்! தெற்றெனக் கேண்மின்; ஒருவன்,
'குரல் கூந்தால்! என் உற்ற எவ்வம் நினக்கு யான்
உரைப்பனைத் தங்கிற்று, என் இன் உயிர்' என்று
மருவு ஊட்டி, மாறியதன் கொண்டு, எனக்கு
மருவு உழிப் பட்டது, என் நெஞ்சு.
எங்கும் தெரிந்து அது கொள்வேன், அவன் உள் வழி.
பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை
திங்கள்உள் தோன்றி இருந்த குறு முயால்! -
எம்கேள் இதன் அகத்து உள்வழிக் காட்டீமோ?
காட்டீயாய் ஆயின், கத நாய் கொளுவுவேன்;
வேட்டுவர் உள் வழிச் செப்புவேன்; ஆட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன்' மதி திரிந்த
என் அல்லல் தீராய் எனின்.
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு
வெள் மழை ஓடிப் புகுதி; சிறிது என்னைக்
கண்ணோடினாய் போறி, நீ.
நீடு இலைத் தாழைத் துவர் மணல் கானல்உள்
ஓடுவேன் ஓடி ஒளிப்பேன்! பொழில் தொறும்
நாடுவேன்; கள்வன் கரந்து இருக்கற்பாலன் கொல்?
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உதுக் காண், எம்
கோதை புனைந்த வழி.
உதுக் காண் - சாஅய் மலர் காட்டி, சால்பு இலான் யாம் ஆடும்
பாவை கொண்டு ஓடியுழி.
உதுக் காண் - தொய்யில் பொறித்த வழி.
உதுக் காண் - 'தையால்! தேறு' எனத் தேற்றி, அறன் இல்லான்
பைய முயங்கியுழி.
அளிய என் உள்ளத்து, உயவுத் தேர் ஊர்ந்து,
விளியா நோய் செய்து, இறந்த அன்புஇல் அவனைத்
தெளிய - விசும்பினும் ஞாலத்து அகத்தும்
வளியே! எதிர்போம் - பல கதிர் ஞாயிற்று
ஒளி உள் வழி எல்லாம் சென்று, முனிபு எம்மை
உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ;
காட்டாயேல், மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன், என்
கண்ணீர் அழலால் தெளித்து.
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் -
பிறங்கு இரு முந்நீர்! - வெறு மணல் ஆகப்
புறம் காலின் போக இறைப்பேன், முயலின்
அறம் புணை ஆகலும் உண்டு.
துறந்தானை நாடித் தருகிற்பாய் ஆயின், நினக்கு ஒன்று
பாடுவேன், என் நோய் உரைத்து.
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் -
எல்லி ஆக, 'எல்லை' என்று ஆங்கே, பகல் முனிவேன்.
எல்லிய காலை இரா முனிவேன்; யான் உற்ற
அல்லல் களைவார் இலேன்.
ஓஒ! கடலே! தெற்றெனக் கண் உள்ளே தோன்ற இமை எடுத்துப்
'பற்றுவேன்' என்று, யான் விழிக்கும்கால் மற்றும் என்
நெஞ்சத்துஉள் ஓடி ஒளித்து, ஆங்கே, துஞ்சா நோய்
செய்யும், அறன் இல் அவன்.
ஓஒ! கடலே! ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீ உள்
நீர் பெய்த காலே சினம் தணியும்; மற்று இ·தோ
ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ
நீர் உள் புகினும் சுடும்.
ஓஒ! கடலே! 'எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள்?' என்று இந் நோய்
உற்று அறியாதாரோ நகுக! நயந்தாங்கே
இற்றா அறியின், முயங்கலேன், மற்று என்னை
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு.
ஆங்கு,
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீரக்
கெடல் அரும் காதலர் துனை தரப், பிணி நீங்கி,
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத்
திறன் இலார் எடுத்து தீ மொழி எல்லாம்
நல் அவைஉள் படக் கெட்டாங்கு,
இல்லாகின்று அவள் ஆய் நுதல் பசப்பே.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework