அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம்வேட்டவை செய்து, ஆங்குக், காட்டி மற்று ஆங்கே,
அறம் பொருள் இன்பம் என்று அம் மூன்றின் ஒன்றன்
திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று -
அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து, ஒருத்தி
அணி நலம் பாடி வரற்கு.
ஓர் ஒருகால் உள்வழியள் ஆகி, நிறை மதி
நீருள் நிழல்போல், கொளற்கு அரியள் - போருள்
அடல் மா மேல் ஆற்றுவேன், என்னை, மடல் மா மேல்
மன்றம் படர்வித்தவள் - வாழி, சான்றீர்!
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை,
மை அறு மண்டிலம் வேட்டனள் - வையம்
புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும்
இன்னா இடும்பை செய்தாள் - அம்ம, சான்றீர்!
கரந்தாங்கே இன்னா நோய் செய்யும், மற்று இ·தோ -
பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு?
இடி உமிழ் வானத்து, இரவு இருள் போழும்
கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் - வடி நாவின்
வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க்
கல்லாமை காட்டியவள் - வாழி, சான்றீர்!
என்று ஆங்கே,
வருந்த மா ஊர்ந்து, மறுகின் கண் பாடத்
திருந்து இழைக்கு ஒத்த கிளவி கேட்டு, ஆங்கே
பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை
போலக், கொடுத்தார் தமர்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework