பொன் மலை சுடர் சேரப் புலம்பிய இடன் நோக்கித்,தன் மலைந்து உலகு ஏத்தத் தகை மதி ஏர்தரச்,
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி, இன நாரை
முக்கோல் கொள் அந்தணர் முது மொழி நினைவார் போல்,
எக்கர் மேல் இறைகொள்ளும், இலங்கு நீர்த் தண் சேர்ப்ப!
அணிச் சிறை இனக் குருகு ஒலிக்கும்கால், நின் திண் தேர்
மணிக் குரல் என இவள் மதிக்கும்மன்: மதித்தாங்கே,
உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு, அவை கானல்
புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே;
நீர் நீவிக் கஞன்ற பூக் கமழும்கால், நின் மார்பின்
தார் நாற்றம் என இவள் மதிக்கும்மன்; மதித்தாங்கே,
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்கக், கழிப் பூத்த
மலர் என உணர்ந்து, பின் மம்மர் கொண்டு இனையுமே;
நீள் நகர் நிறை ஆற்றாள், நினையுநள் வதிந்தக் கால்,
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்மன்: மதித்தாங்கே,
நனவு என புல்லும்கால், காணாளாய்க், கண்டது
கனவு என உணர்ந்து, பின் கையற்றுக் கலங்குமே;
என ஆங்கு;
பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின்,
அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி
மதி மருள் வாள் முகம் விளங்கப்,
புது நலம் ஏர்தரப், பூண்க, நின் தேரே!

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework