மாண உருக்கிய நல் பொன் மணி உறீஇபேணித் துடைத்தன்ன மேனியாய்! கோங்கின்
முதிரா இள முகை ஒப்ப, எதிரிய
தொய்யில் பொறித்த வன முலையாய்! மற்று, நின்
கையது எவன்? மற்று உரை.
'கையதை - சேரிக் கிழவன் மகளேன் யான்; மற்று இ·து ஓர்
மாதர்ப் புலைத்தி விலை ஆகச் செய்தது ஓர்
போழில் புனைந்த வரிப் புட்டில்' - 'புட்டில் உள் என் உள?
காண்தக்காய்! என் காட்டிக் காண்.'
காண், இனி; தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு
காட்டுச் சார் கொய்த சிறு முல்லை, மற்று இவை.
முல்லை இவை ஆயின் - முற்றிய கூழையாய்!
எல்லிற்றுப் போழ்து ஆயின் - ஈதோளிக் கண்டேனால்;
'செல்' என்று நின்னை விடுவேன், யான்; மற்று எனக்கு
மெல்லியது, ஓராது அறிவு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework