தீம் பால் கறந்த கலம் மாற்றக் கன்று எல்லாம்தாம்பின் பிணித்து, மனை நிறீஇ, யாய் தந்த
பூம் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇ, பாங்கரும்
முல்லையும் தாய பாட்டம் கால் - தோழி! - நம்
புல் இனத்து ஆயர் மகளிரோடு எல்லாம்
ஒருங்கு விளையாட, அவ் வழி வந்த
குருந்தம் பூம் கண்ணிப் பொதுவன், மற்று என்னை,
'முற்று இழை ஏஎர் மட நல்லாய்! நீ ஆடும்
சிற்றில் புனைகோ சிறிது?' என்றான்; 'எல்லா! நீ
'பெற்றேம் யாம்' என்று பிறர் செய்த இல் இருப்பாய்;
கற்றது இலை மன்ற காண்' என்றேன்; 'முற்று இழாய்!
தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய
கோதை புனைகோ நினக்கு?' என்றான்; 'எல்லா! நீ
ஏதிலார் தந்த பூக் கொள்வாய்; நனி மிகப்
பேதையை மன்ற பெரிது' என்றேன்; 'மாதராய்!
ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல்
தொய்யில் எழுதுகோ மற்று?' என்றான்; 'யாம் பிறர்
செய் புறம் நோக்கி இருத்துமோ? நீ பெரிது
மையலை மாதோ; விடுக' என்றேன். தையலாய்!
சொ்லிய ஆறு எல்லாம் மாறு மாறு யான் பெயர்ப்,
அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனை நீ
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து, எந்தையும்
யாயும் அறிய உரைத்தீயின், யான் உற்ற
நோயும் களைகுவை மன்.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework