நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்துஅற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும்
திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது,
குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல், உலகத்து
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும்
பிழையாது வருதல் நின் செம்மையின் தர, வாய்ந்த
இழை அணி கொடித் திண் தேர் இன மணி யானையாய்!
அறன் நிழல் எனக் கொண்டாய், ஆய் குடை; அக் குடை
புற நிழல் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவள் காண்டிகா-
பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்பு உற்றாளை!
பொய்யாமை நுவலும் நின் செங்கோல்; அச் செங்கோலின்
செய் தொழில் கீழ்ப் பட்டாளோ, இவள்? இவள் காண்டிகா-
காம நோய் கடைக் கூட்ட வாழும் நாள் முனிந்தாளை!
ஏமம் என்று இரங்கும், நின் எறி முரசம்; அம் முரசின்
ஏமத்து இகந்தாளோ, இவள்? இவள் காண்டிகா-
வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை!
ஆங்கு;
நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற
வடுக் காட்டக், கண் காணாதற்று ஆக, என் தோழி
தொடி கொட்ப நீத்த கொடுமையைக்
கடிது என உணராமை கடிந்ததோ, நினக்கே?

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework