அன்னை; கடுஞ் சொல் அறியாதாய் போல நீஎன்னைப் புலப்பது, ஒறுக்குவென் மன் யான் -
சிறுகாலை இற்கடை வந்து, குறி செய்த
அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர,
எவ் வழிப் பட்டாய் சமன் ஆக, இவ் எள்ளல்;
முத்து ஏர் முறுவலாய்! நம் வலைப் பட்டது ஓர்
புத்தி யானை வந்தது காண்பான் யான் தங்கினேன்;
ஒக்கும்;
அவ் யானை, வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்;
அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி, நறு நறா நீர் உண்டு -
ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடைத்,
தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டுத்,
தொய்யகம் தோட்டிக், குழை தாழ் வடி மணி,
உத்தி பொறித்த புனை பூண் பருமத்து -
முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து,
நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து,
தன் நலம் காட்டித், தகையினால், கால் தட்டி வீழ்க்கும்,
தொடர் தொடர் ஆக வலந்து, படர் செய்யும்
மென் தோள் தடக் கையின் வாங்கித், தன் கண்டார்
நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை,
இன்று கண்டாய் போல், எவன் எம்மைப் பொய்ப்பது, நீ?
எல்லா! கெழீஇத், தொடி செறித்த தோள் இணை, தத்திக்
தழீஇ கொண்டு ஊர்ந்தாயும் நீ;
குழீஇ, அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா,
உவா அணி ஊர்ந்தாயும் நீ;
மிகாஅது, சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண் கண்
நீர்க்கு விட்டு, ஊர்ந்தாயும் நீ;
சார்ச் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் 97-28
சிறு பாகர் ஆக சிரற்றாது, மெல்ல,
விடாஅது நீ எம் இல் வந்தாய்; அவ் யானை
கடாஅம் படும் இடத்து ஓம்பு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework