யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? இதுவும் ஓர்ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து; எம் மனை
வாரல் நீ; வந்தாங்கே மாறு;
என் இவை; ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று
போர் எதிர்ந்தற்றாப் புலவல்; நீ கூறின், என்
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது?
ஏஎ! தெளிந்தேம் யாம்; காயாதி - எல்லாம் வல் - எல்லா!
பெரும் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்தாங்கு,
வருந்தல் நின் வஞ்சம் உரைத்து;
மருந்து இன்று - மன்னவன் சீறின், தவறு உண்டோ? நீ நயந்த
இன் நகை! தீதோ இலேன்;
மாண மறந்து உள்ளா நாண் இலிக்கு இப் போர்
புறம் சாய்ந்து காண்டைப்பாய் - நெஞ்சே! உறழ்ந்து இவனைப்
பொய்ப்ப விடேஎம் என நெருங்கின், தப்பினேன்
என்று அடி சேர்தலும் உண்டு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework