ஒரூஉக்! கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்றமுடி உதிர் பூந் தாது மொய்ம்பின ஆகத்,
தொடிய, எமக்கு நீ யாரை? பெரியார்க்கு
அடியரோ, ஆற்றாதவர்?
கடியர் தமக்கு, யார் சொல்லத் தக்கார் மாற்று?
வினை கெட்டு, வாய் அல்லா வெண்மை உரையாது, கூறு நின்
மாயம், மருள்வார் அகத்து;
ஆய் இழாய்! நின் கண் பெறின் அல்லால், இன் உயிர் வாழ்கல்லா
என் கண் எவனோ, தவறு?
இ·து ஒத்தன்! புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல்
வள் உகிர் போழ்ந்தனவும், வாள் எயிறு உற்றனவும்,
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும், நல்லார்
சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும்,
தவறு ஆதல் சாலாவோ? கூறு;
அது தக்கது; வேற்றுமை என் கண்ணோ ஓராதி; தீது இன்மை
தேற்றக் கண்டீயாய்; தெளிக்கு;
இனி தேற்றேம் யாம்;
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார்
தார் மயங்கி வந்த தவறு அஞ்சிப், போர் மயங்கி,
நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின், மற்று இனி
யார் மேல் விளியுமோ? கூறு.

JSN Venture 2 is designed by JoomlaShine.com | powered by JSN Sun Framework